சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.015
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை பண் - இந்தளம் (திருக்காறாயில் (திருக்காறைவாசல்) கண்ணாயிரநாதர் கயிலாயநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=LEEqnGRXMpM |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.015  
நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை
பண் - இந்தளம் (திருத்தலம் திருக்காறாயில் (திருக்காறைவாசல்) ; (திருத்தலம் அருள்தரு கயிலாயநாயகியம்மை உடனுறை அருள்மிகு கண்ணாயிரநாதர் திருவடிகள் போற்றி )
நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை கொன்றைத் தாரானே! தாமரைமேல் அயன்தான் தொழும் சீரானே! சீர் திகழும் திருக்காறாயில் ஊரானே! என்பவர் ஊனம் இலாதாரே. | [1] |
மதியானே! வரிஅரவோடு உடன் மத்தம் சேர் விதியானே! விதி உடை வேதியர்தாம் தொழும் நெதியானே! நீர் வயல் சூழ் திருக்காறாயில் பதியானே! என்பவர் பாவம் இலாதாரே. | [2] |
விண்ணானே! விண்ணவர் ஏத்த விரும்பும் சீர் மண்ணானே! விண் இடை வாழும் உயிர்க்கு எல்லாம் கண்ணானே! கடிபொழில் சூழ் திருக்காறாயில் எண்ணானே! என்பவர் ஏதம் இலாதாரே. | [3] |
தாயானே! தந்தையும் ஆகிய தன்மைகள் ஆயானே! ஆய நல் அன்பர்க்கு அணியானே! சேயானே! சீர் திகழும் திருக்காறாயில் மேயானே! என்பவர்மேல் வினை மேவாவே. | [4] |
கலையானே! கலை மலி செம்பொன் கயிலாய மலையானே! மலைபவர் மும்மதில் மாய்வித்த சிலையானே! சீர் திகழும் திருக்காறாயில் நிலையானே! என்பவர்மேல் வினை நில்லாவே. | [5] |
ஆற்றானே! ஆறு அணி செஞ்சடை ஆடுஅரவு ஏற்றானே! ஏழ் உலகும் இமையோர்களும் போற்றானே! பொழில் திகழும் திருக்காறாயில் நீற்றானே! என்பவர்மேல் வினை நில்லாவே. | [6] |
சேர்த்தானே! தீவினை தேய்ந்து அறத் தேவர்கள் ஏத்தானே! ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர் காத்தானே! கார் வயல் சூழ் திருக்காறாயில் ஆர்த்தானே! என்பவர்மேல் இடர் அடராவே. | [7] |
கடுத்தானே, காலனைக் காலால்! கயிலாயம் எடுத்தானை ஏதம் ஆக(ம்), முனிவர்க்கு இடர் கெடுத்தானே! கேழ் கிளரும் திருக்காறாயில் அடுத்தானே! என்பவர்மேல் வினை அடராவே. | [8] |
பிறையானே! பேணிய பாடலொடு இன் இசை மறையானே! மாலொடு நான்முகன் காணாத இறையானே! எழில் திகழும் திருக்காறாயில் உறைவானே! என்பவர்மேல் வினை ஓடுமே. | [9] |
செடி ஆரும் புன் சமண் சீவரத்தார்களும் படி ஆரும் பாவிகள் பேச்சுப் பயன் இல்லை; கடி ஆரும் பூம்பொழில் சூழ் திருக்காறாயில் குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை, குற்றமே. | [10] |
ஏய்ந்த சீர் எழில் திகழும் திருக்காறாயில் ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற பாய்ந்த நீர்க் காழியுள் ஞானசம்பந்தன் சொல் வாய்ந்தஆறு ஏத்துவார் வான் உலகு ஆள்வாரே. | [11] |